செவிகொடு
சமுதாயமே...
உனக்கொரு
சேதி சொல்கிறேன்...!
இன்று
உனக்கொரு
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல்
அரசியல்வாதியின்
பளிங்கு மண்டபம்..!
விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்..!
உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...
இனி
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?
இனாம்
வாங்கி வாங்கியே
வளைந்து போன
உன் முதுகுத்தண்டு
இனி
நிமிரவே நிமிராதா...?
உன்
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம்
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!
உன்
அறுவடை களவாடி
உனக்கு
ஒரு வேளை சோறு
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!
நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு
அரைக்கோவனம் இனாம்,
நின்று கொள்ள
ஆளுக்கொரு
சதுரடி இனாம்,
உயிர் நனைக்க
நாளுக்கொரு
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...!
போதும்...!
இனாம் போதும்...!
உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...
இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...
போதும்...!
இனாம் போதும்...!
இலவச நோய்
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...!
போதும்...!
இனாம் போதும்...!
உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்..!
அன்புடன்,
வசந்த்.
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல்
அரசியல்வாதியின்
பளிங்கு மண்டபம்..!
விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்..!
உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...
இனி
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?
இனாம்
வாங்கி வாங்கியே
வளைந்து போன
உன் முதுகுத்தண்டு
இனி
நிமிரவே நிமிராதா...?
உன்
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம்
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!
உன்
அறுவடை களவாடி
உனக்கு
ஒரு வேளை சோறு
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!
நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு
அரைக்கோவனம் இனாம்,
நின்று கொள்ள
ஆளுக்கொரு
சதுரடி இனாம்,
உயிர் நனைக்க
நாளுக்கொரு
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...!
போதும்...!
இனாம் போதும்...!
உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...
இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...
போதும்...!
இனாம் போதும்...!
இலவச நோய்
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...!
போதும்...!
இனாம் போதும்...!
உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்..!
அன்புடன்,
வசந்த்.
Arumai nanba...
ReplyDeleteurnagikondirukkum nejankalukku unathu kavithai oru alaippu maniyagattum....
u can send it to some weekly journals..pls do it.
all the best..keep posting like this.
Thanks dear...
ReplyDeleteI will write more with your encouragements..