Tuesday, May 16, 2017

முத்தச் சபலம்...!


முப்பத்தியேழாம் வயதில் 
ஒரு முத்தச் சபலம்.......!!!

இரவின் நிசப்தத்தில், 
பேருந்து நிலையத்தின் 
அரையிருட்டில், 
யாரும் கவனித்திராத 
கண்ணிமைக்கும் 
தருணத்தில் 
அது நிறைவேறியது...

நீண்ட 
வருடங்களுக்குப் பின் 
என் வீடு வந்து 
ஊர் திரும்பும் 
எனது பெற்றோருக்கு 
நான் கொடுத்த 
கண்ணீர் முத்தத்தில்...!!!

-வசந்த்.