முப்பத்தியேழாம் வயதில்
ஒரு முத்தச் சபலம்.......!!!
இரவின் நிசப்தத்தில்,
பேருந்து நிலையத்தின்
அரையிருட்டில்,
யாரும் கவனித்திராத
கண்ணிமைக்கும்
தருணத்தில்
அது நிறைவேறியது...
நீண்ட
வருடங்களுக்குப் பின்
என் வீடு வந்து
ஊர் திரும்பும்
எனது பெற்றோருக்கு
நான் கொடுத்த
கண்ணீர் முத்தத்தில்...!!!
-வசந்த்.