Tuesday, November 15, 2011

உங்களுக்காக...

தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...

மலைபோல விஞ்ஞானம்
மளமளன்னு வளந்தாலும்
நம்பிக்கையோட சேர்ந்து - மூட
நம்பிக்கையும் வளருதுங்க...

அக்கம் பக்கம் சுத்திப் பாத்தா
பல கூத்து நடக்குதுங்க
ஒன்னு ரெண்டு சொல்லுறேங்க
உங்களுக்கும் சேத்துதாங்க...

மனுஷன் செஞ்ச பாவத்துக்கு
ஆடு கோழி அருக்குறாங்க
சாமியோட செல கழுவ
ரத்தக்கொடம் தூக்குறாங்க...

உசுருள்ள ஜீவ ராசி
ஒவ்வொன்னும் சாமிதாங்க
உசுருக்குள் புதஞ்சிருக்கும்
நெசஞ்சாமி அன்புதாங்க...

புள்ள குட்டி அத்தனையும்
பட்டினியால் தவிக்குதுங்க
பொண்டாட்டி தாலி வச்சு
போலி பூஜ நடக்குதுங்க...

ஒன்னு ரெண்ட கூட்டிப் பாத்து
ஒம்பதால கழிக்குறாங்க
ஆத்தா வச்ச அழகு பேர
சூத்திரத்தால் மாத்துறாங்க...

எண்ணுக்குள்ளே ஒண்ணுமில்லே
எழுதி நானும் தாறேனுங்க
எண்ணத்தோட உழைப்பிருந்தா - தல
எழுத்து கூட மாறும் போங்க...

வட்ட ரேகை புள்ளி ரேகை
வாழ்க்கை நிலை சொல்வதில்லை
விலங்கினங்கள் ஏது ஒன்றும்
ஆயுள் ரேகை பார்ப்பதில்லை...

பச்சக் கல்லு மோதிரத்தால்
பணங்காசு சேராது
சிறுநீரக அடைப்புக்கல்ல
செவப்புக் கல்லு கரைக்காது...

நேரங்காலம் பாக்காம
வேர்வ சிந்த திட்டம் போட்டா
கப்பல் கூட காலடியில்
எப்படி நான் வெளங்க வப்பேன்...
தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...


அன்புடன்,
வசந்த்

3 comments:

  1. chancelesss....i doubt all ur writings are urs or viramuthu's...jus kidding...that much depth i can see in ur lyrics...keep going man..

    ReplyDelete
  2. சிறுதுளிதான் பெருவெள்ளம் ஆகுமுங்க -- உங்கள் குரலை மென்மேலும் உயர்துடிங்க..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி பார்த்திபன்...
    உங்களின் இந்த வார்த்தைகள்
    என்னை செதுக்கிக்கொண்டே இருக்கும்...

    ReplyDelete