(கிராமத்தில் இருக்கும் தனது காதலியைக் காண ஓடிவரும் ஒரு நகரத்து காதலனின் முனகல்கள்...)
பல மணி நேரம்
பயணித்து
உன்
பனிமுகம் பார்க்க
வந்திருக்கிறது
இந்த பருவ நதி...
உன்
ஓர விழிப்
பார்வைக்காய்
ஓடிவந்திருக்கிறது
இந்த தென்றல்...
புல்லில் விழும்
பனித்துளி
அதன்
சல்லி வேர் தொட்டு
சந்தோஷிப்பதைப் போலவே
உன் மடியில்
முகம் புதைத்து முக்தியடைய
முகிலாய் வந்திருக்கிறான்
இந்த
முடிசூடா மன்னன்...
உனது
புன்னகைக்காய்
பூக்கனை தொடுத்து
புறப்பட்டு
வந்திருக்கிறது
இந்த புல்லாங்குழல்...
அந்தி வேளைகளில்
அழைக்காமலே ஓடிவரும்
கவிதைகைளைப் போலவே
உன் பாதத்தின்
இளஞ்சூடு காண
ஒரு தூரத்து ஜீவன்
தூறலாய் வந்து
விழுந்திருக்கிறது....
பதினெட்டு வருடம்
படுத்திருந்த
என் கண்ணீர் நதி
சொல்ல முடியாத
சோகத்தால்
பட்டென்று படிதாண்ட
உன் தோட்ட மலர்களில்
பனியாய் உறைந்திருக்கிறது
ஒரு உயிர்...
பிசுபிசுக்கும்
ஈர ரத்தத்தோடு
உள் மனதிற்குள்
அம்பு சுமந்து
உனக்காக கொஞ்சம்
உயிர் சுமந்து
ஓடோடி வந்திருக்கிறது
ஒரு ஊமைப்பறவை...
இதயம்
பாதிக்கப்பட்ட
பருவக்காற்று
நிவாரணத்திற்காய்உன்
உயிர் நோக்கி
ஊர்வலம் வந்திருக்கிறது....
இடுப்பில்
குடம் சுமந்து
இடக்கையில்
மலர் சுமந்து
நடக்கும் இளந்தளிரே...
உன் குடத்திலிருந்து
ததும்பும்
தண்ணீரைப் போலவே
உயிர் ததும்ப அழும்
ஆத்மாவின் குரல் கேட்கிறதா....
அடி பெண்ணே...
என் சன்னலோரத்தில்
ஒரு
சின்னப்பார்வை வீசு...
பன்னீர்ப்பூ
விரல் கொண்டு
என் கண்ணீர் துடை...
உன் ஈரப்பார்வையால்
இதயம் நனைத்து
கைக்குட்டையால்
தலை துவட்டு....
அந்தி நேரத்தில்
மல்லார்ந்து படுத்து
மனம் விட்டு அழ
உன் மடி கொடு...
உன் கண்ணீர்
என்
கன்னத்தில் விழ,
உன் உதடு
என்
காதுகளில் உரச
என்
தலை களைந்து
ஆறுதல் சொல்...
உன் தாவணி
பிழிந்து
என் தாகம் தனி...
உன் கூந்தல் கொண்டு
என் முகம் மூடு...
இது போதுமடி
முல்லையே...
இதற்குத்தானே
என் உயிர்
ஏங்கி ஏங்கி
இளைத்தது...
இதற்குத்தானே
என் தேகம்
இறந்து இறந்து
முளைத்தது...
இனி
இறந்தாலும்
என் சவம்
நிம்மதியாய்
எரியும்...!
அன்புடன்,
வசந்த்.
பல மணி நேரம்
பயணித்து
உன்
பனிமுகம் பார்க்க
வந்திருக்கிறது
இந்த பருவ நதி...
உன்
ஓர விழிப்
பார்வைக்காய்
ஓடிவந்திருக்கிறது
இந்த தென்றல்...
புல்லில் விழும்
பனித்துளி
அதன்
சல்லி வேர் தொட்டு
சந்தோஷிப்பதைப் போலவே
உன் மடியில்
முகம் புதைத்து முக்தியடைய
முகிலாய் வந்திருக்கிறான்
இந்த
முடிசூடா மன்னன்...
உனது
புன்னகைக்காய்
பூக்கனை தொடுத்து
புறப்பட்டு
வந்திருக்கிறது
இந்த புல்லாங்குழல்...
அந்தி வேளைகளில்
அழைக்காமலே ஓடிவரும்
கவிதைகைளைப் போலவே
உன் பாதத்தின்
இளஞ்சூடு காண
ஒரு தூரத்து ஜீவன்
தூறலாய் வந்து
விழுந்திருக்கிறது....
பதினெட்டு வருடம்
படுத்திருந்த
என் கண்ணீர் நதி
சொல்ல முடியாத
சோகத்தால்
பட்டென்று படிதாண்ட
உன் தோட்ட மலர்களில்
பனியாய் உறைந்திருக்கிறது
ஒரு உயிர்...
பிசுபிசுக்கும்
ஈர ரத்தத்தோடு
உள் மனதிற்குள்
அம்பு சுமந்து
உனக்காக கொஞ்சம்
உயிர் சுமந்து
ஓடோடி வந்திருக்கிறது
ஒரு ஊமைப்பறவை...
இதயம்
பாதிக்கப்பட்ட
பருவக்காற்று
நிவாரணத்திற்காய்உன்
உயிர் நோக்கி
ஊர்வலம் வந்திருக்கிறது....
இடுப்பில்
குடம் சுமந்து
இடக்கையில்
மலர் சுமந்து
நடக்கும் இளந்தளிரே...
உன் குடத்திலிருந்து
ததும்பும்
தண்ணீரைப் போலவே
உயிர் ததும்ப அழும்
ஆத்மாவின் குரல் கேட்கிறதா....
அடி பெண்ணே...
என் சன்னலோரத்தில்
ஒரு
சின்னப்பார்வை வீசு...
பன்னீர்ப்பூ
விரல் கொண்டு
என் கண்ணீர் துடை...
உன் ஈரப்பார்வையால்
இதயம் நனைத்து
கைக்குட்டையால்
தலை துவட்டு....
அந்தி நேரத்தில்
மல்லார்ந்து படுத்து
மனம் விட்டு அழ
உன் மடி கொடு...
உன் கண்ணீர்
என்
கன்னத்தில் விழ,
உன் உதடு
என்
காதுகளில் உரச
என்
தலை களைந்து
ஆறுதல் சொல்...
உன் தாவணி
பிழிந்து
என் தாகம் தனி...
உன் கூந்தல் கொண்டு
என் முகம் மூடு...
இது போதுமடி
முல்லையே...
இதற்குத்தானே
என் உயிர்
ஏங்கி ஏங்கி
இளைத்தது...
இதற்குத்தானே
என் தேகம்
இறந்து இறந்து
முளைத்தது...
இனி
இறந்தாலும்
என் சவம்
நிம்மதியாய்
எரியும்...!
அன்புடன்,
வசந்த்.
hmmm..yaruppa antha gramatthu paingili?
ReplyDelete