Wednesday, November 23, 2011

பெண்மை...

உதடுகளின்
ஈர வெடிப்பில்
தேங்கிவிடச்
சம்மதமில்லை!

மார்பகங்களின்
மந்த வனப்பில்
தடுக்கி விழ
மனமில்லை!

கருவிழியின்
இரவுக்குள்
தொலைந்து போக
விருப்பமில்லை!

இமை விளிம்பின்
நிழலுக்குள்
இளைப்பாற
இஷ்டமில்லை!

காதோர
சன்ன ரோமத்தில்
சிக்கிக்கொள்ளும்
சிந்தனை இல்லை!

கழுத்தோர
சின்ன ஈரத்தில்
கரைந்து போக
இஷ்டமில்லை!

ஒய்யார
கன்னக் குழியில்
சுழன்று போக
சம்மதமில்லை!

உள்ளங்கை
மென்மைக்குள்
உறங்கிப் போக
விருப்பமில்லை!

நெற்றிக்
கதகதப்பில்
உருகிப் போக
உத்தேசமில்லை!

கருங்கூந்தலில்
மை கொண்டு
கவிஞனாகும்
கனவுமில்லை!

சின்னச் சின்ன
வளைவுகளில்
சரிந்து போகச்
சம்மதமில்லை!

என் ஆண்மையின் தேடல்
இவையேதும் இல்லை!
இவையேதும் தடுத்தால்
அது தேடல் இல்லை!
இவைதாண்டி கிடைத்தால்-
அவள்,
என் தேடலின் எல்லை!


அன்புடன்,
வசந்த்.

2 comments:

  1. u should publish as a book soon..such a poetic skill i could see in each line....all the best..

    ReplyDelete
  2. ungal thedalin ellai viraivil kitta vazhthukkal :) :D

    ReplyDelete